Skip to main content

Posts

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 5

  இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 5 அதிகார அமைப்பு பொதுவுடமை தத்துவத்தை தவிர மற்ற அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் மதம் மற்றும் கடவுளின்   கருத்தை சார்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் 2600 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு யுக்தி அடிமையை "கர்ம வினையின் காரணமாக இவ்வாழ்வு அமைந்தது" என்றும் கர்மயோகத்தால் மறுமை சிறப்படையும் என்றும் கூறி உழைப்பு சுரண்டல் செய்தது இன்றளவும் வேலை செய்கிறது. (இன்றளவும் சம்பள உயர்வின்போது தனியார் நிறுவனங்களில் பகவத் கீதையின் “ கடமையைச் செய் பலனை எதிர்பாராதே ” என்ற வாசகம் அனைவரும் மத்தியில் சுழன்று கொண்டிருப்பது ஒரு வேடிக்கையான நிதர்சனமே) . மேலும் மக்களை பொதுத்தன்மையுடைவர்களாக மாற்றி, சிறப்புகளை குறைப்பதால் ஆள்பவர்களுக்கு மிக எளிமையாகிறது. எளிமையாக சொல்லப்போனால் ஆறாவது அறிவை விடுத்த மனித விலங்குகளை ஆள்வது மிகச்சுலபம். ஏதாவது ஒரு சிந்தனையினூடே மக்களுடன் உணர்வு பூர்வமாக இணைவது ஒரு அரசுக்கு தேவைப்படுகிறது. அது புதிய சிந்தனையாக இருக்கவேண்டும் என்பதில்லை. பல்லாயிரம் ஆண்டுகளின் வெற்றியான பிரம்மதத்துவமும், மறுபிறவி தத்துவமும், கர்மவினையும், கடவுளிடம் சரணாகதி என...

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 4

  இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 4 அறிவின் மேல் மனம் படர்தல் விஞ்ஞான லோகாயதவாதத்தில் மூளையின் செயல், சிந்தனை என்ற ஒன்றே உள்ளது. மனம், அறிவு என்று இரண்டில்லை. மனம் என்ற ஒன்று ஏன் இவ்வாராய்ச்சிக்கு எடுத்தோம் என்ற விளக்கம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது.புலன்களால் அறிந்து யதார்த்த சிந்தனையுடன் ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் அறிவு என்றாலும் இங்கு இதை அனைவராலும் செய்ய முடியாமல் போகுமாதலால் , ஆராய்ச்சியை தவிர்த்து புலன்களால் அறிந்து யதார்த்த சிந்தனை மற்றும் தெளிவு கொள்ளலை அறிவு என்று வைத்துக் கொள்வோம். இப்போது மனம் மற்றும் அறிவின் விளக்கம் கொடுத்தாகி விட்டது , பல நேரங்களில்  கருத்துமுதல்வாதத்தின் வெற்றியாக இந்த நிலை தோன்றுகிறது . மனதின் ஆதிக்கம் அறிவைத் தாண்டியும் அதிகமாக இருப்பதற்கு , “ தேவை ” என்ற ஒன்று மட்டும் தான் காரணம் என்று இல்லை , மனிதன் கொண்ட பயமும் ஒரு காரணமாக அமைகிறது. இந்த “ பயம் ” தேவையைத் தாண்டிய ஒன்றாக அமைகிறது (புத்தர் தன் உரைகளில் பயபைரவன் பற்றியும், அமாவாசை இரவை பற்றியும் கூறியுள்ளார்). நான் பயத்தை முதல் அங்கத்திலேயே ஒரு கூறாக சேர்க்காமல் போனதற்கு ஒர...

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 3

 இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 3 மனச்சிந்தனையை எப்படி மடைமாற்றம் செய்கிறார்கள் இதுவரை தேவை,ஆசை,இன்பம்,துன்பம்,லஹரி,பணம்,அதிகாரம்,செல்வாக்கு,போற்றுதல், குறைந்த உழைப்பில் அதிக பலன் மற்றும் இவைகளை அடைய தர்மம் என்ற கயிறு இவைகளைபற்றி பார்த்தோம்.மனச்சிந்தனை என்பது தனக்குள் எழுவது மட்டுமேயின்றி, சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவும் அமைகிறது. சிந்தனையும் பகுத்தறிவும் தான் ஒருவனை மனிதனாக வைக்கிறது.   ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே   தொல்காப்பியம் ஓரறிவு - உற்றறிதல் (தொடுதல் உணர்வு) - புல் , மரம் ஈரறிவு - உற்றறிதல் + சுவைத்தல் - சிப்பி , நத்தை மூவறிவு - உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் - கரையான் , எறும்பு நான்கறிவு - உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் - நண்டு , தும்பி ஐந்தறிவு - உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல் - பறவை , விலங்கு ஆறறிவு - உற்றறிதல் + சுவைத...

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 2

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 2  மனித மனம் எப்படிப்பட்டது ?   இன்றைய நிலையில் மனிதமனம் தன்தேவைகளை குறித்து பெரும்பாலும் சிந்திக்கிறது . அது ஆசையாகவும் இருக்கலாம் தேவையாகவும் இருக்கலாம் சிக்கல் இங்கேயே ஆரம்பிக்கிறது. இந்துதத்துவவியல் மனம் ஆசையை வெல்லும் என்றும் புலனடக்கம் தேவை என்றும் பறைசாற்றும். எண்ணற்ற உதாரணங்களும் புராண நிகழ்வுகளும் இதற்கு சான்றாக கொடுக்கப்படுகிறது (ஆனால் புலனடக்கம் எல்லோருக்குமானதாக நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது) . இந்தத் தேவை அல்லது ஆசையால் தூண்டப்பட்ட மனம் அதை அடைய தவிக்கிறது. மனம் மென்மேலும் துன்பங்களை விரும்புவதில்லை, அது இன்பத்தையே நாடுகிறது. மனம் ஏதோ ஒரு லஹரியில் இருக்க விரும்புகிறது. மனம் பணம், துணை, அதிகாரம், செல்வாக்கு என்று ஏதாவது ஒன்றை தேடுகிறது. அதை அடைய ஆவலடைகிறது. மனம் போற்றுதலுக்குரிய சூழ்நிலையில் வாழ விரும்புகிறது. மனம் குறைந்த உழைப்பையும் அதிக பலனையும் விரும்புகிறது. இந்தத்தேவை, ஆசை, இன்பம், துன்பமின்மை, லஹரி, பணம், அதிகாரம், செல்வாக்கு, போற்றுதல், குறைந்து உழைப்பில் அதிக பலன் இவை எல்லாம் ஒரு புள்ளியில் சேர எல்லாம் கிடைக்கும்...

இன்றையநிலையில் மெய்யியலின் தேவை - பகுதி 1

இக்கட்டுரையில் இன்றைய நிலை பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாம் நிதர்சனத்தை மறந்து பல காலம் வாழ முடியாது. ஒரு நாள் நிதர்சனம் என்ன என்பதை உணர்ந்தே தீருவோம். வரலாற்றில் பல இடங்களில் தத்துவத்தோன்றல்கள் இக்கட்டான சூழ்நிலையில் தோன்றின. சில நேர்வழியையும் சில மாற்றுவழியையும் கொண்டது. என்னைப்பொறுத்தவரை நேர்வழி என்பது “ உலகம் வழி மனம் ” . மாற்றுவழி என்பது “ மனம் வழி உலகம் ” . சிலநேரங்களில் தோன்றிய சிந்தனைகள் விரக்தி ரூபங்களாகவே இருந்தன, குறிப்பாக இந்தியா மற்றும் ஐரோப்பியசிந்தனைகள் தர்க்கசிந்தனைகளாக சில காலம் கைகொடுத்தாலும், அவை யதார்த்தமான உலகக்காண மறுத்தது, மறந்தது. இவையெல்லாம் கண்ணைமூடி உலகைக்காண சொல்லிக்கொடுத்தது. மனம் வழி உலகம் புலன்களை சந்தேகிக்கச்சொல்லியது. “ மனிதன் தொடர்ந்து துக்கத்தைக்காணும் பொழுதும், தோல்வி மற்றும் மரணத்தை காணும் பொழுதும் அவன் எல்லாவற்றிலும் நம்பிக்கை இழக்கிறான் ” என்றும் எதையும் செய்யத் துணிகிறான் என்றும், இருந்தும் வாழ்க்கையை அனுபவிக்க எத்தனிக்கிறோம் என்றும் வரலாற்றில் பல இடங்களில் காண்கிறோம். ஏதன்ஸ் நகரில் பெலோப்பொனோசிய யுத்தத்திற்கு பின் இந்நிலை ஏற்பட்டதாக வர...

மெய்யியல்பார்வை

  மெய்யியல்பார்வை இத்தனை வருடகால வரலாற்றையும் சமுதாய வளர்ச்சியையும் ஒரு மனிதன் தனது வாழ்நாளில் புரிந்து கொள்ள முடியுமா என்பது வியப்பளிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஏதோ ஒரு விதத்தில் தன் எச்சங்களை விட்டுத்தான் செல்கிறன். அதனை அவன் வழியில் வந்தவர்களோ, அல்லது உண்மை அறிவு தேடுபவர்களோ, தேவையின் பொருட்டு, அதை ஒரு கருத்தாகவோ விசயமாகவோ கருதலாம் அல்லது விட்டு விடலாம். இந்த நிகழ்ச்சி பிரவாகம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி என் மனதில் தோன்றி கொண்டுதான் இருக்கிறது. ஒரு மனிதன் தன் புலன்களைக் கொண்டு நன்றாக தேடிய விசயம் அறிவு என்றால் அதை ஆராய்ந்து பார்த்து அதை பயன்படுத்தி பின்னர் தம்மாலும் மற்றவர்களாலும் எல்லா நாட்டிலும் எல்லா காலங்களிலும் உறுதிப்படக்கூடியது தான் விஞ்ஞானம். இன்று நாம் பயன்படுத்தும் நியூட்டனின் கோட்பாடுகள், தேல் தேற்றங்கள், கணிதம்   ஆகியவை இதன் சான்றுகள். இதனைக் கண்டு மலைத்த சிலர் இவை அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்திலே இருக்கிறது அதை லோகாயதசக்தி மறைத்து வைத்திருக்கிறது என்று வியக்கின்றனர். ஏன் இதை கண்டுபிடித்தவரே கூட வியப்பில் ஆள்வதும் உண்டு. அதை இத்தோடு நிறுத்திக் கொண்...

புருகூதன்

புருகூதன்  இடம்: வட்சு நதிக்கரை  இனம்: ஹிந்து ஈரானியர்  காலம்: கி.மு 2500.  கடந்த மூன்று கதைகளிலும் நாம் சமுதாய நோக்கிலேயே அணுகினோம். சமுதாயக் கட்டமைப்பு அதன் பொருள் உற்பத்தி, உறவுகள், வர்க்கம், தொழில்கள்,வாழ்வியல் போன்றவற்றை நாம் பார்த்தோம். இந்த கட்டுரையில் நாம் நிலவியலை பார்க்கலாம். முதலில் தொடங்கிய சமுதாயம் வால்தாய் மலை பள்ளத்தாக்கில் உள்ள வால்கா நதிக்கரை பிரதேசமாக உள்ளது. இவர்கள் இந்தோ-ஐரோப்பியர்கள் போன்டிக் காஸ்பியன்-ஸ்டெஃபி புல்வெளியை சேர்ந்தவர்கள். இவர்கள் வரலாற்றில் புரோட்டோ இந்தோ-ஐரோப்பியர் என குறிப்பிடப்படுவர். இது இந்தோ-ஐரோப்பிய மொழியை பேசும் ஒரு இனக்குழுவை குறிக்கலாம். (ஆரியர்கள் ஒரு இனக்குழு அல்ல என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது ஒரு மொழி பேசும் மக்கள் என்ற அடிப்படையில் மொழியியல் ரீதியாக ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். என்றாலும் இனக்குழுவும் அதன் கிளை மொழிகளும் பிரிக்க முடியாத உறவை கொண்டிருப்பதால் அவர்களை இனக்குழு என்று சில இடங்களில் குறிப்பிட வேண்டி உள்ளது) . ஜெர்மனியர், ஸ்லாவிக், இந்தோ-ஈரானியர் போன்ற 150 க்கும் மேற்பட்ட மொழி குடும்பத்தில் முன்னோ...

அமிர்தாஸ்வன்

 அமிர்தாஸ்வன்  இடம்: மத்திய ஆசியா வட குரு பூமி  இனம்: ஹிந்து ஈரானியர்  காலம்: கி மு 3000  இந்த காலம் தாய் வழி சமுதாயம் முடிந்து தந்தை வழி சமுதாயத்தின் தொடக்கமாக இருக்கிறது. இதற்குக் காரணமாக இருப்பது உணவின் தேவை வேட்டையால் மட்டுமே பூர்த்தி செய்த காலம் மாறி, கால்நடை வளர்ப்பால் உபரி உணவு கிடைத்தது. வேட்டையாடும் நேரத்திற்கு பதிலாக கால்நடை வளர்ப்பு, விலங்கின் ரோமங்கள் மற்றும் தோலால் ஆடை தயாரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உபரியின் காரணமாக தனிச்சொத்துடைமை உண்டானது என்றாலும், அதுவும் தாயிடமே இருக்கலாமே?. ஏன் அது ஆணின் சொத்தானது?. இதன் மூல காரணம் மிக விளக்கமாக "குடும்பத்தின் தோற்றம்" என்ற நூலில் எங்கல்ஸ் விவரித்திருக்கிறார். இதற்கு முன் உள்ள காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டி உள்ளது. கால்நடை வளர்ப்பு என்ற ஒன்று வந்ததிலிருந்து உற்பத்தி சாதனங்களின் மேல் உள்ள உரிமை பொதுவாக ஆண்களுக்கு என்றானது. கால்நடை மற்றும் உற்பத்தி சாதனங்கள் ஆண்களைச் சார்ந்தும். மற்ற அனைத்து பிற பொருள்களின் உரிமை மற்றும் குடும்பத்தின் நிர்வாகம் ஆகியவை பெண்களை சார்ந்து இருந்தது. திருமணம் முற...