Skip to main content

Posts

தத்துவப்பார்வை

  தத்துவப்பார்வை இத்தனை வருடகால வரலாற்றையும் சமுதாய வளர்ச்சியையும் ஒரு மனிதன் தனது வாழ்நாளில் புரிந்து கொள்ள முடியுமா என்பது வியப்பளிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஏதோ ஒரு விதத்தில் தன் எச்சங்களை விட்டுத்தான் செல்கிறன். அதனை அவன் வழியில் வந்தவர்களோ, அல்லது உண்மை அறிவு தேடுபவர்களோ, தேவையின் பொருட்டு, அதை ஒரு கருத்தாகவோ விசயமாகவோ கருதலாம் அல்லது விட்டு விடலாம். இந்த நிகழ்ச்சி பிரவாகம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி என் மனதில் தோன்றி கொண்டுதான் இருக்கிறது. ஒரு மனிதன் தன் புலன்களைக் கொண்டு நன்றாக தேடிய விசயம் அறிவு என்றால் அதை ஆராய்ந்து பார்த்து அதை பயன்படுத்தி பின்னர் தம்மாலும் மற்றவர்களாலும் எல்லா நாட்டிலும் எல்லா காலங்களிலும் உறுதிப்படக்கூடியது தான் விஞ்ஞானம். இன்று நாம் பயன்படுத்தும் நியூட்டனின் கோட்பாடுகள், தேல் தேற்றங்கள், கணிதம்   ஆகியவை இதன் சான்றுகள். இதனைக் கண்டு மலைத்த சிலர் இவை அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்திலே இருக்கிறது அதை லோகாயதசக்தி மறைத்து வைத்திருக்கிறது என்று வியக்கின்றனர். ஏன் இதை கண்டுபிடித்தவரே கூட வியப்பில் ஆள்வதும் உண்டு. அதை இத்தோடு நிறுத்திக் கொண்ட...
Recent posts

புருகூதன்

புருகூதன்  இடம்: வட்சு நதிக்கரை  இனம்: ஹிந்து ஈரானியர்  காலம்: கி.மு 2500.  கடந்த மூன்று கதைகளிலும் நாம் சமுதாய நோக்கிலேயே அணுகினோம். சமுதாயக் கட்டமைப்பு அதன் பொருள் உற்பத்தி, உறவுகள், வர்க்கம், தொழில்கள்,வாழ்வியல் போன்றவற்றை நாம் பார்த்தோம். இந்த கட்டுரையில் நாம் நிலவியலை பார்க்கலாம். முதலில் தொடங்கிய சமுதாயம் வால்தாய் மலை பள்ளத்தாக்கில் உள்ள வால்கா நதிக்கரை பிரதேசமாக உள்ளது. இவர்கள் இந்தோ-ஐரோப்பியர்கள் போன்டிக் காஸ்பியன்-ஸ்டெஃபி புல்வெளியை சேர்ந்தவர்கள். இவர்கள் வரலாற்றில் புரோட்டோ இந்தோ-ஐரோப்பியர் என குறிப்பிடப்படுவர். இது இந்தோ-ஐரோப்பிய மொழியை பேசும் ஒரு இனக்குழுவை குறிக்கலாம். (ஆரியர்கள் ஒரு இனக்குழு அல்ல என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது ஒரு மொழி பேசும் மக்கள் என்ற அடிப்படையில் மொழியியல் ரீதியாக ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். என்றாலும் இனக்குழுவும் அதன் கிளை மொழிகளும் பிரிக்க முடியாத உறவை கொண்டிருப்பதால் அவர்களை இனக்குழு என்று சில இடங்களில் குறிப்பிட வேண்டி உள்ளது) . ஜெர்மனியர், ஸ்லாவிக், இந்தோ-ஈரானியர் போன்ற 150 க்கும் மேற்பட்ட மொழி குடும்பத்தில் முன்னோ...

அமிர்தாஸ்வன்

 அமிர்தாஸ்வன்  இடம்: மத்திய ஆசியா வட குரு பூமி  இனம்: ஹிந்து ஈரானியர்  காலம்: கி மு 3000  இந்த காலம் தாய் வழி சமுதாயம் முடிந்து தந்தை வழி சமுதாயத்தின் தொடக்கமாக இருக்கிறது. இதற்குக் காரணமாக இருப்பது உணவின் தேவை வேட்டையால் மட்டுமே பூர்த்தி செய்த காலம் மாறி, கால்நடை வளர்ப்பால் உபரி உணவு கிடைத்தது. வேட்டையாடும் நேரத்திற்கு பதிலாக கால்நடை வளர்ப்பு, விலங்கின் ரோமங்கள் மற்றும் தோலால் ஆடை தயாரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உபரியின் காரணமாக தனிச்சொத்துடைமை உண்டானது என்றாலும், அதுவும் தாயிடமே இருக்கலாமே?. ஏன் அது ஆணின் சொத்தானது?. இதன் மூல காரணம் மிக விளக்கமாக "குடும்பத்தின் தோற்றம்" என்ற நூலில் எங்கல்ஸ் விவரித்திருக்கிறார். இதற்கு முன் உள்ள காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டி உள்ளது. கால்நடை வளர்ப்பு என்ற ஒன்று வந்ததிலிருந்து உற்பத்தி சாதனங்களின் மேல் உள்ள உரிமை பொதுவாக ஆண்களுக்கு என்றானது. கால்நடை மற்றும் உற்பத்தி சாதனங்கள் ஆண்களைச் சார்ந்தும். மற்ற அனைத்து பிற பொருள்களின் உரிமை மற்றும் குடும்பத்தின் நிர்வாகம் ஆகியவை பெண்களை சார்ந்து இருந்தது. திருமணம் முற...

திவா

 திவா  இடம்: வால்கா நதிக்கரை மத்திய பாகம்    காலம்: கிமு 3500  இனம்: ஹிந்தோ- ஸ்லாவியர்கள். மனிதனின் பரிணாம வளர்ச்சியை டார்வின் விளக்கியது போலவே மார்க்ஸ், எங்கெஸ்  சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சிகளை பற்றி "குடும்பத்தின் தோற்றம்" என்ற நூலில் விளக்கியுள்ளார்கள். "திவா" காலத்தில் தாய் வழி சமுதாயமாக இருந்தாலும் அது குடும்பம் என்ற நிலையில் இருந்து குலம் மற்றும் இனக்குழு என்ற நிலைக்கு வந்தது. இதை இயக்கவியலில் விளக்கும்போது பொருளின் அளவு மாறும்பொழுது குணத்திலும் மாற்றம் ஏற்படும் என்ற கூற்றை உறுதி செய்கிறது. இனக்குழுவின் அளவிற்கு ஏற்ப தங்கும் இடம், வேட்டை முறை, குடும்ப உறவுகள், பொருள் உபயோகம் மற்றும் குழுவின் முடிவுகள் ஆகியவற்றை சில பரிணாம மாற்றங்கள் நிகழ்வது நிதர்சனமாகும். உணவு தேவைகள் மற்றும் காலநிலை மனிதனை இடமாற்றத்திற்கு தூண்டுகின்றன. மலைகளின் குகைகளில் இருந்த மனிதன் பருவ நிலைக்கு தகுந்தார் போல காடுகளிலும் நதிக்கரை ஓரங்களிலும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டனர். பனிக்காலங்களில் மலை குகைகளிலும், கோடையில் நதிக்கரை ஓரங்களிலும், இளவேனில் காலங்களில் காடுகள் மற்ற...

நிஷா

1. நிஷா  வால்கா நதி பிரதேசம் காலம் கி.மு 6000 இனம் ஹிந்தோ- ஐரோப்பியர் இந்த இடம் மலையும் மலை சார்ந்த பிரதேசமாக உள்ளது. மக்கள் மலை குகைகளில் வசிப்பவர்களாக உள்ளனர்.   தொல்காப்பியத்தின் படி இதை குறிஞ்சி நிலமாக கொள்ளலாம். ஆனால் பனிக்காலத்தில் இதை பாலையாக கருதலாம். இங்குள்ள மக்கள் தாய் வழி சமுதாய அமைப்பை கொண்டவர்களாக ஒரு குடும்பமாக இருந்தனர். அங்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு தெளிவான உறவு தாய் தான். தந்தை , சகோதரன் இன்னும் மற்ற உறவுகள் தேவைப்படாத , ஏற்படாத காலம் ஆக இது இருந்தது. இச்சமுதாயத்தின் அனைத்தும் பொது சொத்தாகவே இருந்தது , அதனால் உறவுகள் மற்றும் படிநிலைகள் தேவைப்படவில்லை , அதிகாரம் தாயிடம் இருந்தது. ஏனெனில் அவள் தான் அனைவருக்கும் தாய் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு எந்த பிரிவினையோ , வர்க்கம் என்ற சொல்லோ அதற்கு இடமோ இல்லவே இல்லை. மேலும் செய்யும் செயல் எல்லோருக்கும் பொதுவானது அதனால் வர்ண பேதமும் இங்கு இல்லை. செய்யும் வேலையில் ஆண் பெண் பேதம் இல்லை. காதல் மற்றும் உறவு என்பது ஆண் பெண் இடையே என்றே கொள்ளப்பட்டது. யார் கணவன் என்ற கேள்வி அங்கே கிடையாது. மகனுக்கும் கணவனுக்கு...

வால்கா முதல் கங்கை வரை ஒரு பின்னோட்டம்

  வால்கா முதல் கங்கை வரை ஒரு பின்னோட்டம்.இந்நூலைப் பற்றி பதந்தானந்த கௌசல்யாயன் கொடுத்தது  ஆகச்சிறந்த முன்னுரையாகும். மனித சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமாக இந்த நூல் உள்ளது. கிமு6000 முதல் கிபி1942 வரை உள்ள முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட 20 கதைகள் நம் முன்னே காட்சிபோல உள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகளும் , தத்துவங்களும் , வேதம் மற்றும் உபநிடதங்களும் படித்து அதில் உள்ள சாராம்சத்தை எடுத்து எளிமையான கதைகளாக ராகுல்ஜி நமக்கு கொடுத்திருக்கிறார். நாம் இதை படிக்கும் பொழுது இந்தியதேசத்தில் வடபகுதியில் உள்ள மனித சமுதாயம் எவ்வாறு நாகரிக வளர்ச்சி அடைந்தது என்றும். அவர்களின் பூர்வீகம் எங்கிருந்து என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இன்றைய நிலவரத்தில் கைபர் கணவாய் வழியாக ஆரியர்களின் வருகையை மறுக்கும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு. இந்தப் புத்தகத்தில் வட இந்திய நாகரீகம் மட்டுமே ஆராயப்பட்டுள்ளது, ராகுல்ஜிக்கு தென்னிந்திய-தமிழக தொன்மையான கலாச்சாரமும் பாரம்பரியமும் அறிய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும். அப்பொழுது தமிழ் சம்பந்தமான ஆராய்ச்சிகளும் கட்ட...

முதற்படி

இது மிக யதேர்ச்சியான நிகழ்வு தான். மிக நீண்ட நாட்களாக யாரும் கண்டு கொள்ளாத நிலையில் இருந்த ஒரு புத்தகத்தை பொழுதுபோக்கிற்காக எடுத்து அமர்ந்தேன். அது முதலில் ஒரு சிறுகதைகளின் தொகுப்பு என்றே எண்ணினேன். ஒவ்வொரு கதையின் தலைப்பின் கீழ் அதன் இடம் , காலம் மற்றும் இனத்தின் குறிப்பு இருந்தது. முதல் கதை முதல் தடவை படித்தபோது தெளிவாக புரியவில்லை , மேலும் அது அருவருப்பை கொடுத்தது , இரண்டாவது கதையை தொடர்ந்தேன் , இரு கதைகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளியும் கதையின் போக்கும் மாறுவதை உணர்ந்தேன். நான் குறிப்பிடும் புத்தகம் என்ன என்பதை ஓரளவு ஊகிக்க முடியும் என்று நம்புகிறேன். ஆம்! அது " வால்கா முதல் கங்கை வரை " மதிப்பிற்குரிய ராகுல் சங்கிருத்தியாயன் அவர்களால் எழுதப்பட்டது. தமிழில் கண. முத்தையா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. தொடர்ந்து கதைகளை படிப்பதற்கு முன் புத்தகத்தின் முன்னுரையை படித்தேன். இந்தப் புத்தகம் எதனால் சிறப்பு பெற்றது என்பதையும் ஒவ்வொரு கதை நிகழ்வுகளும் எந்த கருத்தைச் சொல்கிறதோ அதன் மூலநோலின் விவரத்தையும் பதஞ்சல் கவுசல்யாயன் என்ற புத்த மத துறவியும் மாபெரும் அறிஞரும் மிகத் தெளிவான சுரு...