Skip to main content

Posts

Showing posts from April, 2026

தத்துவப்பார்வை

  தத்துவப்பார்வை இத்தனை வருடகால வரலாற்றையும் சமுதாய வளர்ச்சியையும் ஒரு மனிதன் தனது வாழ்நாளில் புரிந்து கொள்ள முடியுமா என்பது வியப்பளிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஏதோ ஒரு விதத்தில் தன் எச்சங்களை விட்டுத்தான் செல்கிறன். அதனை அவன் வழியில் வந்தவர்களோ, அல்லது உண்மை அறிவு தேடுபவர்களோ, தேவையின் பொருட்டு, அதை ஒரு கருத்தாகவோ விசயமாகவோ கருதலாம் அல்லது விட்டு விடலாம். இந்த நிகழ்ச்சி பிரவாகம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி என் மனதில் தோன்றி கொண்டுதான் இருக்கிறது. ஒரு மனிதன் தன் புலன்களைக் கொண்டு நன்றாக தேடிய விசயம் அறிவு என்றால் அதை ஆராய்ந்து பார்த்து அதை பயன்படுத்தி பின்னர் தம்மாலும் மற்றவர்களாலும் எல்லா நாட்டிலும் எல்லா காலங்களிலும் உறுதிப்படக்கூடியது தான் விஞ்ஞானம். இன்று நாம் பயன்படுத்தும் நியூட்டனின் கோட்பாடுகள், தேல் தேற்றங்கள், கணிதம்   ஆகியவை இதன் சான்றுகள். இதனைக் கண்டு மலைத்த சிலர் இவை அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்திலே இருக்கிறது அதை லோகாயதசக்தி மறைத்து வைத்திருக்கிறது என்று வியக்கின்றனர். ஏன் இதை கண்டுபிடித்தவரே கூட வியப்பில் ஆள்வதும் உண்டு. அதை இத்தோடு நிறுத்திக் கொண்ட...

புருகூதன்

புருகூதன்  இடம்: வட்சு நதிக்கரை  இனம்: ஹிந்து ஈரானியர்  காலம்: கி.மு 2500.  கடந்த மூன்று கதைகளிலும் நாம் சமுதாய நோக்கிலேயே அணுகினோம். சமுதாயக் கட்டமைப்பு அதன் பொருள் உற்பத்தி, உறவுகள், வர்க்கம், தொழில்கள்,வாழ்வியல் போன்றவற்றை நாம் பார்த்தோம். இந்த கட்டுரையில் நாம் நிலவியலை பார்க்கலாம். முதலில் தொடங்கிய சமுதாயம் வால்தாய் மலை பள்ளத்தாக்கில் உள்ள வால்கா நதிக்கரை பிரதேசமாக உள்ளது. இவர்கள் இந்தோ-ஐரோப்பியர்கள் போன்டிக் காஸ்பியன்-ஸ்டெஃபி புல்வெளியை சேர்ந்தவர்கள். இவர்கள் வரலாற்றில் புரோட்டோ இந்தோ-ஐரோப்பியர் என குறிப்பிடப்படுவர். இது இந்தோ-ஐரோப்பிய மொழியை பேசும் ஒரு இனக்குழுவை குறிக்கலாம். (ஆரியர்கள் ஒரு இனக்குழு அல்ல என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது ஒரு மொழி பேசும் மக்கள் என்ற அடிப்படையில் மொழியியல் ரீதியாக ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். என்றாலும் இனக்குழுவும் அதன் கிளை மொழிகளும் பிரிக்க முடியாத உறவை கொண்டிருப்பதால் அவர்களை இனக்குழு என்று சில இடங்களில் குறிப்பிட வேண்டி உள்ளது) . ஜெர்மனியர், ஸ்லாவிக், இந்தோ-ஈரானியர் போன்ற 150 க்கும் மேற்பட்ட மொழி குடும்பத்தில் முன்னோ...

அமிர்தாஸ்வன்

 அமிர்தாஸ்வன்  இடம்: மத்திய ஆசியா வட குரு பூமி  இனம்: ஹிந்து ஈரானியர்  காலம்: கி மு 3000  இந்த காலம் தாய் வழி சமுதாயம் முடிந்து தந்தை வழி சமுதாயத்தின் தொடக்கமாக இருக்கிறது. இதற்குக் காரணமாக இருப்பது உணவின் தேவை வேட்டையால் மட்டுமே பூர்த்தி செய்த காலம் மாறி, கால்நடை வளர்ப்பால் உபரி உணவு கிடைத்தது. வேட்டையாடும் நேரத்திற்கு பதிலாக கால்நடை வளர்ப்பு, விலங்கின் ரோமங்கள் மற்றும் தோலால் ஆடை தயாரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உபரியின் காரணமாக தனிச்சொத்துடைமை உண்டானது என்றாலும், அதுவும் தாயிடமே இருக்கலாமே?. ஏன் அது ஆணின் சொத்தானது?. இதன் மூல காரணம் மிக விளக்கமாக "குடும்பத்தின் தோற்றம்" என்ற நூலில் எங்கல்ஸ் விவரித்திருக்கிறார். இதற்கு முன் உள்ள காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டி உள்ளது. கால்நடை வளர்ப்பு என்ற ஒன்று வந்ததிலிருந்து உற்பத்தி சாதனங்களின் மேல் உள்ள உரிமை பொதுவாக ஆண்களுக்கு என்றானது. கால்நடை மற்றும் உற்பத்தி சாதனங்கள் ஆண்களைச் சார்ந்தும். மற்ற அனைத்து பிற பொருள்களின் உரிமை மற்றும் குடும்பத்தின் நிர்வாகம் ஆகியவை பெண்களை சார்ந்து இருந்தது. திருமணம் முற...